இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைவரான சுனில் சேத்ரி பூமாவுடன் 3 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
பெங்களூரு கால்பந்து அணித் தலைவரான இவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு தற்போது சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவர் ஆறு முறை ஆண்டின் அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் (All India Football Federation - AIFF) சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு 2011 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும் 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப் பட்டுள்ளது.