இந்தியா சுபாஷ் சந்திரபோஸின் 123வது ஆண்டு பிறந்த நாள் விழாவினை அனுசரித்தது.
அவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று பிறந்தார்.
நேதாஜியின் பிறந்த நாளை நினைவு கூரும் பொருட்டு, இந்திய அரசு வாரணாசியில் நேதாஜியின் (நேதாஜி கோயில்) பெயரில் ஒரு தலித் பெண்ணை தலைமைப் பூசாரியாக நியமித்து ஒரு கோயிலைத் திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கோயிலானது பாரத அன்னையை வழிபாடு செய்யுமாறு அமைக்கப்பட உள்ளது.
இந்தக் கோயிலானது சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கட்டப்பட உள்ளது.
சிவப்பு நிறமானது புரட்சியையும் கருப்பு நிறமானது வலிமையையும் வெள்ளை நிறமானது அமைதியையும் குறிக்கின்றது.
இந்திய அரசானது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று ஒரு விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்பதை 2017 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தியது.