ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் எனும் ஒப்பந்த அமைப்பானது ரிநியூ பவர் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைவருமான சுமந்த் சின்ஹா அவர்களை 2021 ஆம் ஆண்டிற்கான பத்து நிலையான மேம்பாட்டு இலக்குகளின் முன்னோடிகளுள் ஒருவராக அங்கீகரித்துள்ளது.
தூய மற்றும் மலிவான ஆற்றலின் அணுகலை மேம்படுத்துதல் (நிலையான மேம்பாட்டு இலக்குகள் – 7) எனும் இலக்கை அடைய இவர் ஆற்றியப் பணிக்காக வேண்டி இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
நிலையான மேம்பாட்டு இலக்குகளின் முன்னோடிகள் என்பவர்கள் ஐ.நாவின் உலகளாவிய ஒப்பந்த அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படும் வணிகத் தலைவர்கள் ஆவர்.
நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்காக சிறப்பான முறையில் பணியாற்றுவதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.