வேளாண் கழிவினை எரிபொருளாக மறுசுழற்சி செய்யும் தக்காசார் புத்தாக்கம் என்ற இந்தியத் திட்டத்திற்கு பிரின்ஸ் வில்லியம்சின் முதலாவது எர்த்சாட் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
இந்தப் பரிசானது சுற்றுச்சூழல்சார் ஆஸ்கார் விருது எனவும் அழைக்கப்படுகிறது.
பூமியைப் காப்பாற்ற முயற்சிக்கும் தனி நபர்களுக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
உலகளவில் பருவநிலை நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் புதுமையான உள்நாட்டுத் தீர்வுகளுக்கு உதவி வழங்கவும் அதனை ஊக்குவிப்பதற்காகவும் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
தக்காசார் புத்தாக்கத் திட்டமானது வித்யூத் மோகன் என்பவரின் தலைமையில் செயல்படுத்தப் படுகிறது.