2050 ஆம் ஆண்டிற்குள் நிகர கார்பன் உமிழ்வினை சுழியமாக்குவதற்கான ஒரு இலக்கினை உறுதி செய்வதற்கு வேண்டி அரசின் ஒரு இளநிலை கூட்டணி விதித்த நிபந்தனைகளை ஆஸ்திரேலிய அமைச்சரவை பரிசீலிக்க உள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், அந்த நாட்டின் பசுமை இல்ல வாயுவின் உமிழ்வினைக் குறைப்பதற்கான ஒரு உயர்லட்சியத் திட்டத்தை மேற்கொள்ள விரும்புவதால் இந்த உறுதிப்பாடு ஆஸ்திரேலியாவிற்கு முக்கியமானதாகும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐ.நா. உச்சி மாநாட்டின் பின்னணியில் இது மேற்கொள்ளப் படுகிறது.