சுவச் சர்வேக்ஷான் விருதுகள் 2019
March 7 , 2019
1972 days
658
- புது தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 2019 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்ஷான் விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் தூய்மைக்கான கள ஆய்வில் இந்தியாவின் தூய்மையான நகரமாக தொடர்ந்து 3-வது முறையாக இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- “தூய்மையான சிறிய நகரம்” என்ற விருது புதுதில்லி நகராட்சி ஆணையப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- “சிறந்த கங்கை நகரமாக” உத்தரகாண்ட்டின் கவுச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- மாநிலத் தலைநகர்ப் பிரிவில் விரைவான முன்னேற்றத்திற்கான விருதை சென்னை நகரம் வென்றுள்ளது.
- இந்தத் தூய்மைக்கான விருதுகள் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
Post Views:
658