கணிதவியலாளர் ஆனந்த் குமார் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான சுவாமி பிரம்மானந்த் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
“Super 30” என்ற அவருடைய முன்னெடுப்பின் மூலம் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வேண்டி அவருக்கு இது வழங்கப்பட்டுள்ளது.
இது பின்தங்கிய மாணவர்களுக்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வேண்டிய நுழைவுத் தேர்விற்கான பயிற்சியினை வழங்குகிறது.
“Super 30” என்பது பாட்னாவில் உள்ள இவருக்குச் சொந்தமான ராமானுஜ கணிதக் கல்வி மையத்தின் ஒரு பயிற்சித் திட்டமாகும்.
இது சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகளைச்சேர்ந்த 30 மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மதிப்பு மிக்க இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.