TNPSC Thervupettagam

சுவீடன் சர்வதேச தகவல் பிரச்சாரம்

March 5 , 2023 505 days 237 0
  • சுவீடன் அரசாங்கமானது புலம்பெயர்ந்தோர் தனது நாட்டிற்கு வருவதை குறைக்கச் செய்வதற்காக சர்வதேச தகவல் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது சுவீடன் அரசின் புலம்பெயர்வு கொள்கை பற்றிய மேலதிகத் தகவல்களைப் பரப்பும்.
  • இந்தப் பிரச்சாரத்தின் போது, சுவீடன் அரசாங்கம் ஆனது வெளிநாடுகளில் தொடர்பு மையங்களை உருவாக்க உள்ளது.
  • சுவீடன் அரசானது 1950 ஆம் ஆண்டு முதல் அகதிகளை வரவேற்று மீள்குடியேற்றம் செய்து வருகிறது.
  • சுவீடன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில், நார்டிக் நாடுகளுக்கு வந்த அகதிகளில் 76% பேர் சுவீடனில் தஞ்சம் புகுந்தனர்.
  • இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த அகதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சுவீடன் அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்