சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் பசுமை ஹைட்ரஜன் தொழிற் சாலையைக் கட்டமைக்கச் செய்வதற்காக எகிப்து மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆண்டுதோறும் 20,000 டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையைக் கட்டமைப்பதற்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய ரீநியூ பவர் பிரைவேட் லிமிடெட் (RENE.BO) என்ற நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.