ஹரியானாவின் சூரஜ்குந்த்தில் நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டு சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த 37வது கண்காட்சியானது நாடு முழுவதும் உள்ள கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கிறது.
இந்த ஆண்டு சூரஜ்குந்த் சர்வதேச கைவினை மேளாவின் பங்குதார நாடாக தான்சானியா நாடும் அதற்கான கருத்துரு (மேளாவில் சிறப்பு கவனம் வழங்கப்படும்) மாநிலமாக குஜராத் மாநிலமும் உள்ளன.