TNPSC Thervupettagam

சூழலியல் அச்சுறுத்தல் குறித்த அறிக்கை 2023

November 8 , 2023 254 days 222 0
  • உணவுப் பாதுகாப்பின்மை, இயற்கைப் பேரிடர்கள், மக்கள்தொகை நெருக்கடி மற்றும் நீர் வள ஆபத்து ஆகிய நான்கு வகை அச்சுறுத்தல்கள் மீது இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • கடுமையான பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் 2.8 பில்லியனாக உயரும்.
  • கடுமையான பல்வேறு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிக வாய்ப்புள்ள நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் அமைந்து உள்ளன.
  • இந்த அறிக்கையானது, 221 நாடுகள் மற்றும் 3,594 துணை தேசியப் பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ள சுதந்திரப் பிரதேசங்களில் மதிப்பாய்வு மேற்கொண்டது.
  • இப்பகுதி உலக மக்கள் தொகையில் 99.99 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது.
  • இந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 66 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையாவது எதிர்கொள்கின்றன.
  • கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அளவிலான மற்றும் குறைந்த அளவிலான சமூக நெகிழ் திறன் கொண்ட 30 அதிக பாதிப்பு வாய்ப்புள்ள நாடுகளில் 19 நாடுகள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் அமைந்துள்ளன.
  • எத்தியோப்பியா, நைஜர், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் அதிக அச்சுறுத்தல் நிலவும் நாடுகளாகும் என்ற நிலையில், அவற்றில் எத்தியோப்பியா மற்றும் நைஜர் ஆகியவை சமீபத்தில் அதிகப் பாதிப்புகள் வாய்ப்புள்ள நாடுகளாக உருவெடுத்துள்ளன.
  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள நாடுகள் மட்டுமே தற்போது எந்தவொரு கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளாமல் உள்ளன.
  • தற்போது 42 நாடுகள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றன என்பதோடு மேலும் சுமார் நான்கு பில்லியன் மக்கள் அதிக அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் பகுதிகளில் வாழச் செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்