TNPSC Thervupettagam

சூழலியல்-ஓட்டம் (E-Flow)

August 6 , 2020 1446 days 586 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது குறைந்தது 6 நதிகளில் மாசுபட்டுள்ள பகுதிகளுக்காக குறைந்த சுற்றுச்சூழல் ஓட்டத்தை (நிலை) நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசிடம் கூறியுள்ளது.
  • சூழலியல்-ஓட்டம் என்பது சாதகமான சுற்றுச்சூழல் நிலையில் ஒரு நதியின் சூழலை மேம்படுத்துவதற்காகத் தேவைப்படும் ஒரு குறைந்தபட்ச ஓட்மாகும்.
  • உத்தரப்பிரதேச மாநில அரசானது சரயு, ஹிண்டோன், ராம்கங்கா, பெட்வா, காக்ரா மற்றும் ரப்தி ஆகிய நதிகளின் மாசுபட்டுள்ள பகுதிகளுக்காக E-Flow-ஐ முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • இதுவரை, மத்திய அரசினால் E-Flow நிர்ணயிக்கப்பட்ட நாட்டில் உள்ள ஒரே நதி கங்கை ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகமானது கங்கைக்கான E-Flow முறைக்காக வேண்டி ஒரு அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்