உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களில் இதுவரை கண்டிராத சுயபிரதிபலிப்புத் தன்மையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவை தவளை செல்களைப் பயன்படுத்தி ஆய்வகங்களில் உருவாக்கப் பட்டன.
செனோபாட்ஸ் (Xenobots) என்பவை பல்வேறு உயிரித் திசுக்களை ஒன்றிணைந்து கட்டமைக்கப்பட்ட சில விருப்பச் செயல்களை மேற்கொள்வதற்காக கணினிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கையான உயிர் உடைய வடிவங்களாகும்.
இவற்றிற்கு ஆப்பிரிக்காவின் நகங்களைக் கொண்ட தவளையின் பெயரானது (செனோபஸ் லேவிஸ்) சூட்டப்பட்டுள்ளது.
உலகின் முதலாவது செனோபாட்ஸ் ஆனது 2020 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நகமுடைய தவளை செல்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டன.
இந்த செனோபாட்ஸ் மனித உடலில் புற்றுநோய் செல்களைக் கண்டறிதல் அல்லது கடலில் உள்ள தீங்கு விளைக்கும் நுண் நெகிழிகளைச் சேகரிப்பது போன்ற பயனுள்ள செயல்பாடுகளைச் செய்ய வருங்காலத்தில் பயன்படுத்தப்படலாம்.