தமிழ்நாடு மாநிலத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட செம்மரக் கட்டைகளின் வருடாந்திர ஏற்றுமதி ஒதுக்கீட்டு அளவினை சுமார் 900 டன்களாக வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வனத்தில் வளர்க்கப்படும் செம்மரங்களை ஏற்றுமதி செய்வதற்கு சுழிய அளவிலான ஒரு ஏற்றுமதி ஒதுக்கீட்டையும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
செம்மரம் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பரவிக் காணப்படும் ஓர் இந்திய வட்டார மர இனமாகும்.
இந்த மர இனமானது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில தனித்துவமான வளங்களைக் கொண்ட காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வட்டார இனமாகும்.
செம்மரங்கள் என்பது பொதுவாக செம்மண் மற்றும் வெப்பமான மற்றும் வறண்டப் பருவநிலை கொண்ட பாறை பாங்கான, வளமிழந்த மற்றும் தரிசு நிலங்களில் வளரும்.
மிகவும் மெதுவாக வளரும் மர இனமான இது இயற்கையாக வளரும் காடுகளில் 25-40 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்நிலையை அடையும்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆனது, சமீபத்தில் அதன் செந்நிறப் பட்டியலில் செம்மரங்களை (அல்லது செஞ்சந்தனம்) மீண்டும் ‘அருகி வரும்’ இனங்களாக வகைப்படுத்தியுள்ளது.
இது 1972 ஆம் ஆண்டின் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் IVவது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
செம்மரங்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா திகழ்கிற நிலையில், அதைத் தொடர்ந்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.