TNPSC Thervupettagam

செம்மொழி விருதுகள்

October 5 , 2021 1054 days 672 0
  • மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்தது.
  • இந்த விருதானது 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
  • 2010 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் V.S. ராஜம் பெறுகிறார்.
  • 2011 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் பொன் கோதண்டராமன் பெறுகிறார்.
  • 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு முறையே பேராசிரியர் E. சுந்தரமூர்த்தி மற்றும் பேராசிரியர் P. மருதநாயகம்  ஆகியோர் பெறுகின்றனர்.
  • 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு முறையே பேராசிரியர் K, மோகனராசு மற்றும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் பெறுகின்றனர்.
  • 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு முறையே பேராசிரியர் கா. ராஜன் மற்றும் பேராசிரியர் உல்ரிச் நிக்கோலஸ் ஆகியோர் பெறுகின்றனர்.
  • 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு முறையே கவிஞர் ஈரோடு தமிழன்பன் மற்றும் பேராசிரியர் கு. சிவமணி ஆகியோர் பெறுகின்றனர்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்