TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு ஆண்டு

September 23 , 2019 1765 days 952 0
  • 2020 ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாகக் கொண்டாட தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • தெலுங்கானாவில் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ‘செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்தியைக்’ கொண்டு வந்த நிதி ஆயோக் உடன் மாநில அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு’ என்ற ஆவணத்தைத் தயாரிக்கும் போது நிதி ஆயோக் உடன் கையெழுத்திட்ட முதலாவது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது.
  • சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைப்பான நாஸ்காம் ஆனது ஹைதராபாத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலின் சிறப்புமிகு மையத்தை அமைப்பதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்