TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு

September 7 , 2023 317 days 250 0
  • ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ஒரு ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஆனது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதிநவீன தன்னிச்சை இயக்கம் கொண்ட ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்திரஜால் என்று பெயரிடப்பட்டுள்ள இது பரந்த அளவிலான பகுதியையும் பாதுகாக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு (C-UAS) என்று கூறப்படுகிறது.
  • இந்த அமைப்பானது அணுசக்திக் கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய்க் கிணறுகள் போன்ற முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கக் கூடியது.
  • மேலும், இது பல்வேறு வகையான பல ஆளில்லா விமானங்கள் மூலமாக ஒரு முழு நகரத்தையும் உள்ளடக்கிய பரந்த அளவிலான பகுதியையும் பாதுகாக்கும் திறன் கொண்டது.
  • இந்தியாவில் இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்