TNPSC Thervupettagam

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிமரம்

July 13 , 2023 374 days 230 0
  • 77வது சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டைச் சுவர் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றினை மாநில அரசு புதுப்பித்து வருகிறது.
  • 148 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பமானது சுதந்திரத்தின் போது நாட்டிலேயே மிக உயரமானதாக இருந்தது.
  • 1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட கோட்டைக்குள் அமைந்த முதல் வர்த்தக மையம் என்பதால் புனித ஜார்ஜ் அவர்களின் பெயரால் இந்தக் கோட்டைக்கு இந்தப் பெயரிடப்பட்டது.
  • இது 1774 ஆம் ஆண்டில், கல்கத்தா அரசாங்கத்தின் தலைமையிடமாக அறிவிக்கப் படும் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கியக் குடியேற்றமாக இது இருந்தது.
  • 1974 ஆம் ஆண்டு வரை இந்தக் கோட்டையில் ஆளுநர்களால் தேசியக் கொடி ஏற்றப் பட்டது.
  • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சுதந்திரத் தின விழாவில் முதல்வர்கள் கொடியேற்றுவதற்கான உரிமையை வழங்க செய்யுமாறு வேண்டி மத்திய அரசினை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்