கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் மற்றும் புல்லாங்குழல் கலைஞர் ஷஷாங்க் சுப்ரமணியம் ஆகியோருக்குப் பிரான்சு அரசாங்கத்தின் மதிப்புமிக்க செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத் துறை மற்றும் இந்திய-பிரான்சு உறவுகளின் மேம்பாட்டிற்கான அவர்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத் துறைகளில் கலைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தில் வளம் சேர்த்த அவர்களின் படைப்பாற்றல் திறன்களை மிகவும் நன்கு கௌரவிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
திருமதி சாய்ராம் அவர்கள், பத்மஸ்ரீ மற்றும் இசைக் கழகத்தின் சங்கீதா கலாநிதி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
திரு. சுப்ரமணியம் அவர்கள், வாத்திய இசையில் அவரது திறமைக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.