பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப் பாதைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த சுரங்கப் பாதை முழுவதாக தயாராகும் போது தவாங் என்னுமிடத்திற்கான பயண தூரம் குறைக்கப்படும்.
மேலும் பாதுகாப்புப் படைகள் வருடம் முழுவதும் அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பிராந்தியத்தில் அனைத்துத் தட்பவெப்பநிலைக் காலங்களிலும் போக்குவரத்து வசதிக்காக இதைப் பயன்படுத்துவர்.
இந்த சேலா சுரங்கப் பாதை அப்பகுதியிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பொருளாதார நடவடிக்கைகளையும் சுற்றுலாத் துறையையும் ஊக்குவிப்பதற்காக கட்டப்படுகின்றது.
சேலா கணவாய் சுரங்கப்பாதை எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டப்பட இருக்கின்றது.