TNPSC Thervupettagam

சைப்ரஸுக்கு அருகில் நீருக்கடியில் அமைந்த பள்ளத்தாக்கு

February 10 , 2024 160 days 263 0
  • சைப்ரஸ் அருகே இதுவரை அறிந்திராத நீருக்கடியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றினை இஸ்ரேலிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பள்ளத்தாக்கு, அதன் அருகில் அமைந்த நீரடி மலையின் பெயரால் எரடோஸ்தீனஸ் என்று அழைக்கப்படுகிறது.
  • இது சுமார் 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மெசினியன் உவர்தன்மை அதிகரிப்பு நிகழ்வின் போது தோன்றியது.
  • இந்தப் பள்ளத்தாக்கு சுமார் 10 கிமீ அகலமும் 500 மீ ஆழமும் கொண்டது என்பதோடு இது உப்புப் படிவுகள் படிவதற்கு முன்னதாக மெசினியன் காலத்தின் தொடக்கத்தில் புதையுண்டது.
  • மெசினியன் காலத்தில் மத்தியத் தரைக் கடல் மட்டம் குறைந்ததால், கடல் நீரின் உப்புத்தன்மை அதிகரித்ததன் காரணமாக, எரடோஸ்தீனஸ் பள்ளத்தாக்கு உருவாகச் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்