சைலேஷ் கோவிந்த் கன்புலே என்பவருக்கு “2021 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்புப் படையின் கைவினை வெடிகுண்டு எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் புத்தாக்க விருதானது” (NSG Counter-IED and Counter-Terrorism Innovator Award 2021) வழங்கப் பட்டு உள்ளது.
குண்டு வெடிப்பினை தாங்கக்கூடிய தலைக்கவசத்தை உருவாக்கியதற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயந்திரவியல் மற்றும் தொழில்துறை பொறியியல் துறையின் பேராசிரியார் ஆவார்.
இது தேசிய பாதுகாப்புப் படையினால் வழங்கப்படும் ஒரு வருடாந்திர விருதின் இரண்டாவது பதிப்பாகும்.
இந்த விருது வழங்கும் விழாவானது குர்கானுக்கு அருகே உள்ள மானேஷ்வரில் அமைந்துள்ள தேசியப் பாதுகாப்புப் படை வளாகத்தில் நடைபெற்றது.