TNPSC Thervupettagam

ஜக்ஜித் பவதியா – சர்வதேசப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்

June 7 , 2021 1145 days 550 0
  • ஜக்ஜித் பவதியா அவர்கள் சர்வதேசப் போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்தியாவின் போதைப் போருள் கட்டுப்பாட்டு ஆணையராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி (சுங்கம்) ஆவார்.
  • இவர் வியன்னாவில் அமைந்துள்ள இந்த அமைப்பிற்குத் தலைமை தாங்க உள்ள முதல் இந்தியர் ஆவதோடு இந்தப் பொறுப்பினை ஏற்ற இரண்டாவது பெண்மணியும் ஆவார்.
  • சர்வதேசப் போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியமானது ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளின் மூன்று சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளுக்கு இணங்கி செயல்படுகின்றனவா என்பதையும் சர்வதேசப் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாட்டினையும் சேர்த்து கண்காணிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்