நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா அர்டெர்ன் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 பெருந்தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலானது Fortune என்ற இதழால் வெளியிடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான உலகின் இந்தப் பட்டியலானது வருடந்தோறும் வெளியிடப் படும் இப்பட்டியலின் 8வது பதிப்பாகும்.
கோவிட்-19பெருந்தொற்றின் எதிர்பாராத சூழ்நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கிய பிரபலமான மற்றும் பிரபலமற்ற தலைவர்களைக் கொண்டாடும் வகையில் இந்தப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
சீரம் இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான அதார் பூனாவாலா அவர்கள் இந்தப்பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஆவார்.