TNPSC Thervupettagam

ஜன் அவுசாதி திவாஸ் – மார்ச் 07

March 8 , 2019 2031 days 487 0
  • இந்தியா முழுவதும் மார்ச் 07 ஆம் தேதி ஜன் அவுசாதி தினமாக அனுசரிக்கப்படும் என்று இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் மன்சூக் மண்டாவியா அறிவித்துள்ளார்.
  • இது பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா (PMBJY - Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) திட்டத்திற்கு உந்துசக்தி அளிப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு PMBJY கேந்திரா இருக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
  • பொது மக்களுக்காக சுமார் ரூ.1000 கோடியிலான நிதியை சேமிக்கப்படுவதற்கு இந்தத் திட்டம் வழி கோலுகிறது. இந்த மருந்துகள் சந்தை விலையைக் காட்டிலும் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை குறைவாக விற்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்