நிலையான மின்சார வழங்கீடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக அணு சக்தியை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு புதிய கொள்கையை ஜப்பான் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் அணுசக்திப் பயன்பாட்டினை படிப்படியாக நிறுத்துவதற்கான அதன் முந்தையத் திட்டத்தை ஜப்பான் அரசு மாற்றியமைத்தது.
இந்தப் புதிய கொள்கையானது, தற்போதுள்ள அணு உலைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கும், பழைய அணு உலைகளின் செயல்பாட்டு நாட்களை நீட்டிக்கச் செய்வதற்கும் ஒரு அழைப்பினை விடுத்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமா பேரழிவிற்குப் பிறகு ஜப்பானில் அணுசக்தி எதிர்ப்பு உணர்வு மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருத்துகள் கணிசமாக அதிகரித்தன.