குளிர் பாலைவனப் பிரதேசமான லடாக், ஜம்மு காஷ்மீரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடுமையான பனிப் பொழிவின் காரணமாக வெளி உலகத்தோடு ஆறு மாத காலத்திற்குத் தொடர்பிழந்த நிலையிலிருக்கும் பனிப் பாலைவனப் பிரதேசத்திற்கு ஆளுநர் சத்யபால் மாலிக்கின் நிர்வாகம் கோட்டப் பிரிவுத் தகுதி நிலையை வழங்கியது.
இந்த கோட்டப் பிரிவு லே நகரை அதன் தலைமையகமாகக் கொண்டு லே மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த புதியக் கோட்டத்திற்கு கோட்டாட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் ஜெனரல் ஆகிய இரு புதிய பதவிகளின் உருவாக்கத்திற்கு அனுமதியளிக்கப் பட்டிருக்கின்றது.