ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிக்கும் பஹாரி என்ற பழங்குடிச் சமூகத்திற்குப் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 370 மற்றும் 35A ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப் பட்டதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் விளிம்பு நிலைப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க இது வழி வகுத்தது.
ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் ஒதுக்கீடானது 7% ஆக உள்ளது.
குஜ்ஜார் மற்றும் பேக்கர்வால் சமூகத்தினர் 1991 ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.
பஹாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மத்திய அரசானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதிபதி சர்மா ஆணையத்தினை நியமித்தது.