ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் இவராவார்.
1920 ஆம் அண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவின் ஒன்றுபட்ட ஐக்கிய மாகாணத்தில் உள்ள அலிகார் நகரத்தில் ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
இது 1988 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் மத்தியப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.
உருது மொழியில் ஜாமியா என்பது பல்கலைக் கழகத்தையும் மிலியா என்பது தேசியத்தையும் குறிக்கிறது.
இந்திய தேசியக் காங்கிரஸைச் சேர்ந்த தேசியத் தலைவரான அபுல் கலாம் ஆசாத் என்பவர் இதன் தொடக்க கால ஆதரவுத் தலைவர்களில் ஒருவராவார்.