ஜாம்செத்ஜி நுசர்வான்ஜி டாட்டா அவர்கள் எடெல்கிவ் ஹுருன் மனித இனப் பற்றாளர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஹீருன் ஆராய்ச்சி மற்றும் எடெல்கிவ் அறக்கட்டளை அமைப்பினால் தொகுத்து வெளியிடப் படும் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியர் இவராவார்.
இவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஆவார்.
இவர் ஜாம்செட்பூரில் உள்ள டாடா இரும்பு மற்றும் எஃகு ஆலையில் நிறுவனராவார்.
ஜாம்செட்ஜி டாடா அவர்கள் “இந்தியத் தொழில்துறையின் தந்தை” என்று அழைக்கப் படுகிறார்.
ஜவஹர்லால் நேரு அவரை “ஒற்றை மனிதத் திட்டக் குழு ஆணையம்” (One-Man Planning Commission) எனக் குறிப்பிட்டுள்ளார்.