ஜார்ஜ் VI பனிப் படலம் - பன்னிரண்டு வகையான புதிய இனங்கள்
March 27 , 2025 5 days 33 0
ஜார்ஜ் VI பனிப் படலத்தில் இருந்து பிரிந்த A-84 பனிப்பாறையால் புதிதாக வெளிப் படும் கடற்பரப்பில் பன்னிரண்டு வகையான மிகப் புதிய உயிரினங்களை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய இனங்களில் இராட்சதக் கடல் சிலந்திகள், பேய்க் கணவாய் /ஆக்டோபி மற்றும் பவளப் பாறைகள் அடங்கும்.
அவர்கள் சுபாஸ்டியன் எனப்படுகின்ற தொலைதூரக் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இயக்கப் படும் வாகனத்தினைப் (ROV) பயன்படுத்தி கடலின் அடிப்பகுதியை மிக நன்கு ஆராய்ந்து, 1,300 மீட்டர் ஆழத்தில் மிகவும் வளம் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.