தென் கொரியத் தூதர் பாங் கில் ஷின் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பகவான் மகாவீர் விக்லாங் சஹாயாதா சமிதி (BMVSS - Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti) ஆகியோர் இணைந்து “ஜெய்ப்பூர் காலணி கொரியா” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
செயற்கை உறுப்புகள், செயற்கைக் கைகள், முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டிருப்பதை மையமாகக் கொண்ட தட்டைப் பாதங்கள் ஆகியவற்றை அமைப்பதற்காக மருத்துவத் தொழில்நுட்ப வணிகத்துடன் கொரியா இணைந்துள்ளது.
1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட BMVSS அமைப்பு 78 மில்லியன் மாற்றுத் திறனாளிகளுக்கும் மேல் மறுவாழ்வு அளிக்கும் உலகின் மிகப்பெரிய அமைப்பாகும்.
இது மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள், இடுக்கிகள் மற்றும் பிற உபகரணங்களை இலவசமாக வழங்குகின்றது.
ஜெய்ப்பூர் காலணி என்பது முழங்காலுக்குக் கீழே ஊனமுடன் இருப்பவர்களுக்கு இரப்பரை அடிப்படையாகக் கொண்ட நீடித்த மற்றும் எடை குறைவான செயற்கைக் காலாகும்.