1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது, நிரம்பி வழியும் அகதிகள் முகாம்களில் அவர் ORS என்ற குடிநீரை அறிமுகம் செய்து பலருக்குத் தனது சேவையை வழங்கி வந்தார்.
அந்த காலக் கட்டத்தில் அங்குப் பரவலாக பரவி வந்த காலரா மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் அவரை ORS என்ற குடிநீரைக் கண்டுபிடிப்பதற்கு வழி வகுத்தது.
அவரது இந்தச் சிறப்பு மருந்தானது "20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு" என்று தி லான்செட் அமைப்பினால் அழைக்கப்படுகிறது.
2002 ஆம் ஆண்டில், டாக்டர் திலீப் மஹாலனாபிஸ் மற்றும் டாக்டர் நதானியேல் எஃப் பியர்ஸ் ஆகியோர் வாய்வழி நீர்ச்சத்து இழப்பீட்டினை ஈடு செய்தல் சிகிச்சையைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தியதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் வழங்கப் பட்ட பொலின் பரிசினைப் பெற்றனர்.