இவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், மனநலக் கல்வி நிறுவனத்தில் நீண்ட காலம் தலைவராக பணிபுரிந்தவரும் ஆவார்.
இவர் 1961 ஆம் ஆண்டில் மனநலக் கல்வி நிறுவனத்தின் முதல் பெண் மேல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
இவர் 1984 ஆம் ஆண்டில் மனநல மருத்துவர் ஆர் தாராவுடன் இணைந்து ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையை (SCARF India - Schizophrenia Research Foundation) நிறுவினார்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்ற ஒரு சமூகம் சார்ந்த தளமான ஆஷாவையும் (ASHA) அவர் நிறுவினார்.
இவர் கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் ஒரு மலையாளிக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
இவரது சமூகப் பணிகளுக்காக 1992 ஆம் ஆண்டில் இவர் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.