ஐநா தலைமையகத்தில் நடைபெறும் ஒரு விழாவில் இந்திய அமைதிப் படை வீரர்கள் மூவருக்கு டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப் பட உள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள்சபையின்அமைதிப் படை மேற்கொண்ட பணிகளில் ஈடுபட்டிருந்த 103 இராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் பொதுமக்களில் இம்மூவர் பணியின் போது உயிரிழந்தனர்.
காங்கோவில் பணியிலிருந்த ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் மற்றும் ஈராக் நாட்டில் பணியிலிருந்த ஷபர் தாஹர் அலி ஆகிய மூன்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர்கள் இதில் அடங்குவர்.