டாவோஸ் கொள்கை உச்சி மாநாடானது உலகப் பொருளாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் “Great Reset Initiative” (பெரும் சீரமைப்புத் திட்டம்) என்ற ஒரு முன்னெடுப்பானது டாவோஸ் கொள்கை உச்சி மாநாட்டின் போது தொடங்கப்பட உள்ளது.
இந்த உச்சி மாநாட்டின் மீதான கருத்துரு “ஒருங்கிணைந்த மற்றும் நிலையான உலகத்திற்கான பங்குதாரர்கள்” என்பதாகும்.
2021 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார மன்றம் தனது டாவோஸ் கூட்டத்தில் ஒரு புதிய இரட்டை உச்சி மாநாட்டு வடிவத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒன்று வழக்கமான டாவோஸ் கொள்கை உச்சி மாநாடு, மற்றொன்று புதிய மிகப்பெரிய பெரும் சீரமைப்புத் திட்ட முன்னெடுப்பு (Great Reset Initiative ) என்பதாகும்.
அடிப்படையில், கோவிட்-19 நெருக்கடியிலிருந்து உலகளாவியப் பொருளாதாரத்தை மீட்க இந்தப் புதிய முயற்சி தொடங்கப்படுகிறது.