TNPSC Thervupettagam
May 17 , 2021 1162 days 621 0
  • ஏர்டெல் பணவழங்கீட்டு வங்கியானது டிஜிகோல்டுஎனும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இது வாடிக்கையாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யும் ஒரு டிஜிட்டல் தளமாகும்.
  • இந்தத் திட்டமானது டிஜிட்டல் கோல்டு வழங்கும் ‘சேஃப் கோல்டு’ என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • டிஜிகோல்டின் உதவியுடன் ஏர்டெல் பணவழங்கீட்டு வங்கியின் சேமிப்புக் கணக்கினை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ‘ஏர்டெல் தேங்க்ஸ்’ என்ற ஒரு  செயலியைப் பயன்படுத்தி 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்ய இயலும்.
  • மேலும் அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கியில் சேமிப்புக் கணக்கினை வைத்துள்ள தங்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் டிஜிகோல்டினைப் பரிசாக அளிக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்