குஜராத் மாநில அரசானது ஊரகப் பகுதிகளில் பொது நலனுக்காக தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக “டிஜிட்டல் சேவா சேது” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களை இணைப்பதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள 14,000 கிராமப் பஞ்சாயத்துகளிலும் பொது நலச் சேவைகள் கிடைக்கப் பெறும்.
ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் இ-கிராம அலுவலகத்தைப் பெறும். எனவே கிராமத்தில் உள்ளவர்கள் தாலுக்கா மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.