ஹரியானா காவல் துறையானது ஒரு தனித்துவமான பட்டைக் குறிமுறை கொண்ட மென்பொருளை ஏற்றுக் கொண்டுள்ளது.
தடயவியல் அறிக்கைகளுக்காக இந்த தனித்துவமான பட்டைக் குறிமுறை மென்பொருளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதலாவது காவல்துறை இதுவாகும்.
1000ற்கும் மேற்பட்ட டிஜிட்டல் தடயவியல் அறிக்கைகளைப் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப் படுகின்றது.
குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கு இது ஒரு ஊடுருவ இயலாத பாதுகாப்பை வழங்குகின்றது. மேலும் இது இந்த அறிக்கைகளின் தடையில்லா கண்காணிப்பு முறையையும் உருவாக்குகின்றது.