டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பு மேம்படுத்தப்பட்ட இராமன் நிறப்பிரிவைச் சார்ந்த (SERS - Surface Enhanced Raman Spectroscopy) ஒரு கையடக்கமான கருவியை உருவாக்கியுள்ளனர்.
இது டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
மேலும் இது ஒரு மணிநேரத்திற்குள் டெங்கு சோதனை முடிவுகளை வழங்கும்.
டெங்குவை முன்கூட்டியே கண்டறிதல் என்பது நோயாளியின் உடல்நிலை மோசமடைவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.
இதற்கான ஆராய்ச்சிக்கு கல்வி அமைச்சகத்தின் IMPRINT இந்தியா எனும் திட்டம் நிதி உதவி வழங்குகிறது.