இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டு டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு பிரியங்கா மோஹித்என்பவரைத் தேர்வு செய்துள்ளது.
இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதான மலையேறும் வீராங்கனை ஆவார்.
இந்த விருதானது நிலம் சார்ந்த சாகசத் துறையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக வேண்டி வழங்கப்படுகிறது.
இவர் எவரெஸ்ட், லோட்சே மற்றும் மக்காலு போன்ற உலகின் மிக உயரிய சிகரங்களில் ஏறியுள்ளார்.
இவர் உலகின் 10வது உயரிய மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
2020 ஆம் ஆண்டு டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகளைப் பெறும் 7 நபர்களுள் பிரியங்காவும் ஒருவராவார்.