லெப்டினன்ட் கர்னல் சர்வேஷ் தட்வால் மற்றும் கர்னல் அமித் பிஷ்த் ஆகிய இரண்டு இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மதிப்புமிக்க டென்சிங் நார்கே தேசிய சாகச விருதானது (2020) வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது இந்தியாவின் மிக உயரிய சாகச விளையாட்டு விருது ஆகும்.
இது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
தனது நிலம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக இந்திய ராணுவ அதிகாரி கர்னல் அமித் பிஷ்த் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
வான்குடை சாகசத்தில் சாதனை படைத்ததற்காக வேண்டி இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சர்வேஷ் தட்வால் இந்த விருதைப் பெற்றுள்ளார்.