அதிகாரப்பூர்வமாக 2023 ஆம் ஆண்டு டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்திய அரசு (திருத்தம்) மசோதா என அழைக்கப்படும் டெல்லி அரசுப் பணிகள் மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது, பெரும்பாலான அரசுப் பணிகள் மீது டெல்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலான, ஏற்கனவே அறிவிக்கப் பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக அமையும்.
டெல்லியின் மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு, அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் நியமனங்களைக் கையாளும் அதிகாரத்தினை இந்த அவசரச் சட்டம் வழங்கியது.