TNPSC Thervupettagam

டைகர் ஷார்க்ஸ் படைப் பிரிவு

January 22 , 2020 1642 days 861 0
  • சுகோய் - 30 எம்கேஐ போர் விமானங்களின் 222 என்ற படைப் பிரிவானது இந்திய விமானப் படையால் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் விமானப் படைத் தளத்தில் இணைக்கப் பட்டது.
  • இந்தப் படைப் பிரிவிற்கு " டைகர் ஷார்க்ஸ்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • சமீபத்தில் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட படைப் பிரிவுடன் சேர்த்து இதுவரையில் இந்தியாவில் தற்பொழுது 12 “டைகர் ஷார்க்ஸ்” படைகள் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்தப் படையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வேகமாக விரிவடைந்து வரும் உத்திசார் ஆதிக்கத்தைக் கண்காணிப்பதற்காக தமிழகத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. 
  • சீனா தனது முதலாவது இராணுவத் தளத்தை / அயல்நாட்டு இராணுவ உதவித் தளத்தை “ஆப்பிரிக்காவின் கொம்பு” என்று அழைக்கப்படும் பகுதியைச் சுற்றியுள்ள ட்ஜிபூட்டியில் (Djibouti) நிறுவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்