TNPSC Thervupettagam

தகுதிநீக்கம் செய்யக் கோரப்பட்ட மனு

March 21 , 2020 1866 days 615 0
  • உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மணிப்பூர் மாநில அமைச்சரான தொனுவோஜாம் சியாம்குமார் என்பவரை அம்மாநில அமைச்சரவையிலிருந்து உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
  • மேலும் இந்திய உச்சநீதிமன்றமானது இவரை அம்மாநில சட்டசபைக்குள் நுழையவும் தடை விதித்துள்ளது.

பின்னணி

  • சியாம் குமார் என்பவர் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்அம்மாநில நகரத் திட்டமிடல், வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்காக பாஜக கட்சியில் இணைந்தார்.
  • அம்மாநிலத்தின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் இவரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரப்பட்ட மனுக்கள் 2017 ஆம் ஆண்டு முதல் அம்மாநில சட்டமன்ற சபாநாயகரிடம் நிலுவையில் இருந்து வருகின்றது.
  • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் முறையிடப்பட்ட போது, இந்திய உச்சநீதிமன்றம் சரத்து 142ஐப் பயன்படுத்தி அம்மாநில அமைச்சரவையிலிருந்து (கேபினேட்) இவரை நீக்கியது.
  • சரத்து 212ன்படி, உச்சநீதிமன்றம் உள்பட இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றமும் மாநில சட்டமன்றத்தின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது.
  • இந்திய உச்சநீதிமன்றமானது சரத்து 142ஐப் பயன்படுத்தி தனது கீழ் உள்ள விவகாரங்களில் முழுமையானநீதியைநிலைநாட்டுவதற்காக ஒர் உத்தரவைப்பிறப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்