குகி-சின் பழங்குடியின மக்கள் மியான்மரில் இருந்து இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக குடியேறுவது என்பது மணிப்பூரில் மெய்திஸ் மற்றும் குகிஸ் இடையே நடந்து வரும் இன மோதலுக்கு காரணமான முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
மணிப்பூரில் உள்ள தடையற்ற நடமாட்டத்திற்கானப் பகுதியானது இருநாடுகளின் எல்லைகளில் வசிக்கும் பழங்குடியினர் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் இரு நாடுகளிலும் 16 கி.மீ. தொலைவு வரை பயணிக்க அனுமதிக்கிறது.
இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் எல்லைகளில் 1,643 கி.மீ. தொலைவு வரை நீண்டுள்ளது.
இந்திய அரசானது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தடையற்ற நடமாட்டத்திற்கான பகுதியின் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தியது.