TNPSC Thervupettagam

தண்ணீர் பற்றிய GCEW அறிக்கை

March 30 , 2023 477 days 285 0
  • இந்த அறிக்கையானது ‘உலக தண்ணீர் நெருக்கடி குறித்த என்ன, ஏன் மற்றும் எப்படி என்ற கேள்விகள்: தண்ணீர் சார்ந்த பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் முதல் கட்ட மறு ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை தண்ணீர் சார்ந்தப் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையம் (GCEW) வெளியிட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டில் தண்ணீர் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் நெருக்கடி காரணமாக இந்தியாவின் உணவு விநியோகத்தில் 16% குறைவு ஏற்படும்.
  • இந்த அறிக்கையில், உணவு வழங்கீட்டில் 22.4% குறைவுடன் சீனா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து  19.4% குறைவுடன் தென் அமெரிக்க நாடும் இடம் பெற்றுள்ளன.
  • தற்போது நிகர உணவு ஏற்றுமதியாளர்களாக விளங்கும் சீனா மற்றும் ASEAN உறுப்பினர் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகள் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர உணவு இறக்குமதியாளர்களாக மாறும்.
  • இந்தியாவில் தண்ணீர் வழங்கீடு 1100-1197 பில்லியன் கன மீட்டர்கள் என்ற வரம்பிற்கு இடையே உள்ளது.
  • மாறாக, 2010 ஆம் ஆண்டில் 550-710 பில்லியன் கன மீட்டர்களாக இருந்த தண்ணீர் தேவையானது 2050 ஆம் ஆண்டில் 900-1,400 பில்லியன் கன மீட்டர்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் தண்ணீர் நெருக்கடியினை எதிர்கொள்ளும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்