TNPSC Thervupettagam

தத்பார் செயலி - தில்லி காவல் துறை

September 24 , 2019 1764 days 706 0
  • தில்லி காவல் துறையானது ‘தத்பார்’ என்ற செயலியைத் தொடங்கியுள்ளது.
  • குடிமக்களை மையமாகக் கொண்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளை அணுகுவதற்கான ஒரே இடமாக இது விளங்குகின்றது. இது தில்லி காவல் துறையின் அனைத்து வலை தளங்களையும் கைபேசிச் செயலிகளையும் ஒருங்கிணைக்கின்றது.
  • இந்தச் செயலியில் மின்னணு முறையிலான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தல், போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்துதல், காணாமல் போன கைபேசி குறித்து புகார் அளித்தல், காவல் துறை அனுமதியளிப்புச் சான்றிதழ்களைப் பெறுதல் போன்றவற்றை மக்கள் மேற்கொள்ள முடியும்.
  • விருப்பமான அவசரத் தொடர்பு எண்ணிற்கு அழைப்பு விடுக்க அல்லது 100ஐ விரைவாக அழுத்தி காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள இது ஒரு SOS பொத்தானைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்