TNPSC Thervupettagam

தமிழகத்தின் 18வது வனவிலங்குச் சரணாலயம்

March 25 , 2023 484 days 1281 0
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையின் போது, ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் விலங்குகள் சரணாலயம் என்ற புதிய வனவிலங்குச் சரணாலயம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இது தமிழகத்தின் 18வது வனவிலங்குச் சரணாலயம் ஆகும்.
  • ஈரோடு மாவட்டத்தில் தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இரண்டு வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சரணாலயத்தில், முக்கியமாக யானைகள், புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் ஆகிய பல விலங்குகள் இடம் பெற உள்ளன.
  • 21 வெவ்வேறு வகையான பாலூட்டிகள், 139 பறவை இனங்கள் மற்றும் 118 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு இடம் பெற உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்