TNPSC Thervupettagam

தமிழகத்தில் ABPS

January 8 , 2024 193 days 285 0
  • MGNREGA திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான ஊதியம் வழங்கும் முறையை (ABPS) கட்டாயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகம் பெரிதாக பாதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
  • 76.62 லட்சம் பணியில் உள்ள வேலைவாய்ப்பு அட்டைகளுடன் சுமார் 92.13 லட்சம் பணியாளர்கள் தற்போது அத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர்.
  • 90.3 லட்சம் செயல்பாட்டில் உள்ள பணியாளர்கள் (கணக்கின்படி 98%) “ABPS முறையின் கீழ் ஊதியம் பெற தகுதி பெற்ற” பணியாளர்கள் என்ற பிரிவின் கீழ் உள்ளனர்.
  • மாநிலத்தில் 1.25 கோடி பணியாளர்களுடன் மொத்தம் 91.17 லட்சம் வேலைவாய்ப்பு அட்டைகள் உள்ளன.
  • ஆனால், செயல்பாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அட்டைகளின் எண்ணிக்கை 76.62 லட்சம் மட்டுமே ஆகும்.
  • மனித உழைப்புத் தினங்களை உருவாக்கிய மாநிலத்தின் திறனைப் பொறுத்த வரையில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்